Breaking News

இந்த ஆப் இருந்தா உடனே டிலைட் செய்யுங்க RBI எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
இந்த ஆப் இருந்தா உடனே டிலைட் செய்யுங்க RBI எச்சரிக்கை


இன்றைய காலத்தில் தகவல் தொழில்நுட்பம் அதிவேகமாய் வளர்ச்சி அடைந்துவிட்டது.
அதனால் எந்தவொரு வேலையும் மிக எளிதாக செய்துவிட முடியும்


தற்போது மொபைல் போன் மூலமே வங்கி கணக்குக்கள் நிர்வகிக்க வந்துவிட்டது.
வரிசையில் வங்கியில் நின்று பணம் கட்ட, பணம் அனுப்ப ஒருநாள் வேலைக்கு லீவு போட வேண்டும் என்ற அவசியம் இன்று இல்லை.


இன்றைக்கு யூபிஐ UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
இப்படி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதால் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக பணம் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ஆர்பிஐ. அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஒருவர் அவரது மொபைல் போனில் any desk எனி டெக்ஸ் என்ற ஆப் இருந்தால் போதும் உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பணம் முழுவதும் பறிபோய் விடும் என்ற உதாரணத்தை காண்பித்து  அந்த ஆப் டவுன்லோடு செய்யாதீங்க என்று எச்சரித்துள்ளது


அந்த ஆப்பில் அதில் தரப்படும் அனுமதியைக் பெற்று அந்த மொபைலை குறிப்பிட்ட நிறுவனம் தம் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதாவது UPI யுபிஐ மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக எடுத்துவிட முடியும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற டிஜிட்டல் ஆப்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback