சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம் பெண் கொலை 3 பேர் கைது நடந்தது என்ன
சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம் பெண் கொலை 3 பேர் கைது நடந்தது என்ன
சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், அனிச்சன்குப்பத்தில் உள்ள ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் யான்சி (18). இவர், அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 வகுப்பு படித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சென்னை கோயம்பேட்டில் பிரபல நட்சத்திர ஓட்டல் இரவு 11 மணியளவில் இரு தரப்பினர் மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் நடனமாடுவதில் தகராறு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.அங்கிருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் உடனடியாக வெளியேற்றினர்.
ஆனால் வெளியில் வந்தும் இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களைப் பவுன்சர்கள் மீண்டும் விலக்கி எச்சரித்து அனுப்பினர். இந்த மோதலால் நள்ளிரவில் மதுபார் மூடப்பட்டது.
மோதலில் ஈடுபட்டவர்களில் ஒரு தரப்பினர் 3 பைக்குகளில் அங்கிருந்து அடுத்தடுத்து புறப்பட்டனர். மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வந்த சொகுசு காரில் கிளம்பினர்.
இதையடுத்து, சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி எதிர்தரப்பினர் மீது மோதினர். இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற 18 வயது இளம்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னால், அமர்ந்திருந்த 17 வயது சிறுமிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கொலையாளிகள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு எதிரிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags: தமிழக செய்திகள்
