பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மும்பையில் இலவச சிகிச்சை என பரவும் தகவல் உண்மை என்ன முழு விவரம் kem hospital mumbai fake news
அட்மின் மீடியா
0
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மும்பையில் இலவச சிகிச்சை என பரவும் தகவல் உண்மை என்ன முழு விவரம் kem hospital mumbai fake news
சமூக வலைதளங்களில் பரவும் செய்தி:-
உண்மை என்ன:-
பக்கவாதத்தின் முதல் 24 மணி நேரத்திற்குள் மட்டுமே நோயாளிகளுக்கு இது உதவ முடியும் என்றும் ஏற்க்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் சிகிச்சையளிக்க இதைப் பயன்படுத்த முடியாது என்றும் KEM நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் தெளிவுபடுத்துகிறார்.
மேலும் இதே சிகிச்சை மதுரை அரசு மருத்துவமனையிலும் உள்ளது.
மூளை நரம்பியல் துறையில் ரூ.18 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 'நியூரோ கேத்லேப்' கருவி மூலம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பாதிப்பை சரிசெய்ய முடியும்
ரத்தக்குழாயின் வழியே சிறிய குழாயை (கதீட்டர்) செலுத்தி எந்த இடத்தில் அடைப்பு உள்ளதோ அந்த இடத்தில் செலுத்தி அடைப்பை நீக்குவதே இதன் வேலை.
பக்கவாதம் வந்த நான்கு மணி நேரத்திற்குள் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டால் 'அல்டிபிளேஸ்' எனும் மருந்தை செலுத்தி மூளை தமனியில் உள்ள அடைப்பை கரைத்துவிடலாம்.
அதற்கு மேல் தாமதம் எனில் பக்கவாதத்தால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாகும். அதுபோன்ற சமயங்களில் 'நியூரோ கேத்லேப்' கருவி மூலம் பாதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பாதிப்பை சரிசெய்யலாம்.
இதிலுள்ள டிஜிட்டல் சப்ட்ராக் ஷன் ஆஞ்சியோகிராபி (டி.எஸ்.ஏ.,) மூலம் எந்த ரத்தக்குழாயில் அடைப்பு வந்துள்ளது என்பதை கண்டறியலாம். அதன்பிறகு 'மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி' மூலம் 24 மணி நேரத்திற்குள் மூளையில் தற்காலிக 'ஸ்டென்ட்' பொருத்தி அடைப்பை சரிசெய்யலாம்.
மேலும் ரத்தக்குழாய் விரிவடைந்திருந்தால் (அனுரிஸம்) 'கிளிப்பிங், காயிலிங்' முறையில் சரிசெய்யலாம். இந்த கருவியால் பக்கவாத பாதிப்புக்குள்ளானவர்கள் சேதாரமின்றி சிகிச்சை பெற முடியும். பயிற்சி பெற்ற டாக்டர்கள் மூலம் ஒருநாளைக்கு 2 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். முதல்வரின் இலவச காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்
ஆதாரம்:-
https://mumbaimirror.indiatimes.com/mumbai/cover-story/whatsapp-rumour-of-paralysis-cure-sends-patients-haring-to-kem/articleshow/66483449.html
Tags: FACT CHECK