Breaking News

சென்னையில் களமிறங்கியுள்ள நவோனியா கொள்ளை கும்பல், பொதுமக்களுக்கு ரயில்வே போலீசார் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

சென்னையில் பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் நவோனியா கும்பல் செல்போன் திருட்டில் ஈடுபடுவதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 




இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் 

ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த இந்த நவோனியா கும்பல் கூட்டம் நிறைந்த இடங்களில் துண்டுகள், கைகுட்டைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் பயணிகள் கண் அசரும் நேரத்தில் பணத்தையோ அல்லது செல்போனையோ திருடிவிட்டு வந்த வேலை முடிந்துவிட்டது என கிளம்பி விடுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரயில்வே காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்

பேருந்து அல்லது ரயிலில் ஏறும்போது, கூட்ட நெரிசலில், ஒரு சில வினாடிகளில் செல்போன் திருடப்படும். திருட்டுப் போனது பற்றி பொருளை பறிகொடுத்தவருக்கே தெரியாது. திருடியவரைப் பிடித்தாலும் அவரிடம் எதுவும் இருக்காது. இதுதான் நவோனியா கும்பலின் உத்தி.

இந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் மக்கள் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூறுகிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback