Breaking News

விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபர் - உயிர்தப்பியது எப்படி முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபர் - உயிர்தப்பியது எப்படி முழு விவரம் இதோ



குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் மோதி வெடித்து விபத்து ஏற்பட்டது. 

விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருப்பதாக, அகமதாபாத் காவல் ஆணையர் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதுவரை 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்ததாக ஏர் இந்தியா தெரிவித்திருந்தது. ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள் என்றும், 53 பேர் பிரிட்டீஷ் நாட்டவர் என்றும், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், ஏழு பேர் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள். 

உயிர்பிழைப்பு:-

விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்து இருப்பதாக வெளியான தகவல் அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது

இதில் உயிர் பிழைத்த பிஸ்வாஸ், லண்டனில் வாழ்ந்து வருகிறார். இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்துவிட்டு, லண்டன் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

பிஸ்வாஸ் குமார், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதும், அவரது குடும்பத்தினர் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

விமானம் புறப்பட்ட உடனேயே கீழே இறங்கத் தொடங்கியதாகவும், இதனால் ரமேஷ் விஸ்வக்குமார் சீட் பெல்ட்டை கழற்றிய அவர், விமானம் தரையில் அருகே வந்த போது சரியான நேரத்தில் சுதாரித்து திடீரென இரண்டாகப் பிளந்த விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அங்கிருந்து குதித்துள்ளார். இதன்பின் அங்கிருந்து காயங்களோடு ஆம்புலன்ஸை நோக்கி ஓடிய அவர், அங்கிருந்தவர்களிடம் மற்ற பயணிகள் குறித்து விசாரித்தார்.

மேலும் விமானம் விபத்துக்குள்ளானதும் நான் முழித்து பார்த்தேன். அப்போது என்னை சுற்றி கூட்டம் கூட்டமாக சடலங்கள் கிடந்தன. நிறைய பேர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தான் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர் என்றும் கூறினார்.

பிஸ்வாஸ் குமார் கண் மற்றும் மார்பு, கால்களில் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

11ஏ இருக்கை

அவர் ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் உள்ள 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். இந்த 11ஏ இருக்கை ஜன்னல் ஓரத்தில் எகானமி வகுப்பின் முதல் வரிசையில் இருக்கும் இருக்கையாகும். அதேபோல் நெருக்கடியான நேரத்தில் வெளியேறும் அவசர வழியை ஒட்டி அமைந்துள்ள இருக்கை தான் 11 ஏ. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback