2026 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!
2026 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!
2011-ல் காங்கிரஸில் இருந்து விலகிய ரங்கசாமி, என்ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் இக்கட்சியின் 15-வது ஆண்டு விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கட்சிக் கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார் என்.ரங்கசாமி
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி
சொன்னதை செய்யும் அரசாக உள்ளது. எதிர்கட்சி, ஆளும் கட்சி என வேறுபாடுகள் இன்றி அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. குறைகள் இருந்தால் அதை அரசு சரிசெய்யும். இறைவன், சித்தர்கள், அப்பா பைத்திய சாமி அருளால் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
கடந்த ஆட்சியாளர்கள் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து, புதுச்சேரியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. மக்கள் நம் மீது வைத்த நம்பிக்கையை நாம் காப்பாற்றி வருகிறோம். உட்கட்டமைப்பில் தனி கவனம் செலுத்தி வருகிறோம்.அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 11 தொகுதிகளில் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் தேர்வு செய்யப்படுவர்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கால்பதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. காமராஜரின் கொள்கையைக் கொண்ட ஆட்சியை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும். காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் என்.ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags: அரசியல் செய்திகள் புதுச்சேரி செய்திகள்