Breaking News

பணமோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது Actress Jayalakshmi arrest

அட்மின் மீடியா
0

சினிமா பாடலாசிரியர் சினேகன், சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகா் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ‛சினேகம்' என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதே பெயரில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை துவக்கி பணம் வசூலித்து வருவதாக, நடிகையும் பா.ஜ., நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு சினேகன் புகார் அளித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, தன் மீது அவதூறு பரப்பும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது தரப்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி மனுத் தாக்கல் செய்தார். 

அதேபோல் சினேகனும், ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிய கோரி மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம், பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது

இந்நிலையில் , வழக்கு தொடர்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று திருமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

மூன்று மணிநேர சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்கள் ஜெயலட்சுமி இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடிகை ஜெயலெட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback