Breaking News

டாட்டூ குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

டாட்டூ குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம் நடந்தது என்ன முழு விவரம்



பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பரத் இவருக்கு வயது 22 கடந்த மாதம் நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பச்சைக்குத்தும் கடைக்கு சென்ற அவர் தனது கழுத்தில் டாட்டூ குத்திக் கொண்டார். 

சுற்றுலா முடித்து வீடு திரும்பிய நிலையில் டாட்டூ குத்திய இடத்தில் பச்சை புண் ஏற்பட்டு நரம்பு பாதிக்கப்பட்டு கட்டி உருவாகி வலிக்க தொடங்கியது , வலி பொறுக்கமுடியாமல் மருத்துவமனை சென்ற அவர் மருத்துவர்கள் அந்த கட்டியை எடுக்கவேண்டும் என கூறியதை அடுத்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து, சீழ்பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்

மேலும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback