Breaking News

ஏசி வெடித்து சிதறியதில் தாய், மகள் மூச்சுத்திணறி பலி முழு விவரம்

அட்மின் மீடியா
0

 ஏசி வெடித்து சிதறியதில் தாய், மகள் மூச்சுத்திணறி பலி முழு விவரம்

 


 

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகரில் வசித்து வருபவர் ஆதிலா இவரது 16 வயது மகள் நஸ்ரியா  இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தரைதளத்தில் வசித்து வந்தார்

இன்று அதிகாலை 5.45 மணியளவில் இவர்களது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் வெடித்து சிதறியதாக தெரிகிறது.அப்போது எதிர்பாராத விதமாக ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வயர்களில் தீப்பிடித்து எரிந்ததால் கரும்புகை சூழ்ந்தது.

இதில், வீட்டில் உள்ள மின்வயர்கள் முழுவதும் தீப்பற்றி எரிந்து, அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. படுக்கையறை, சமையலறை என அனைத்து பகுதிகளிலும் தீ பரவியது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு துறையினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது படுக்கை அறையில் ஹாலினாவும் நஸ்ரியாவும் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர். 

சமபவ இடத்திற்க்கு சென்ற தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், மூச்சுத்திணறலில் உயிரிழந்த இருவரையும் மீட்டு கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு அதனால் புகை காரணமாக மூச்சுத்திணறலால் இறந்திருக்கலாம் என தெரிகிறது. 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback