Breaking News

மோசமான ஏற்பாடு சர்ச்சையில் முடிந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஏ.ஆர்.ரகுமான், மன்னிப்பு கேட்ட நிறுவனம் ... என்னதான் நடந்தது முழு விவரம்

அட்மின் மீடியா
0

மோசமான ஏற்பாடு சர்ச்சையில் முடிந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஏ.ஆர்.ரகுமான், மன்னிப்பு கேட்ட நிறுவனம் ... என்னதான் நடந்தது முழு விவரம்



இசையமைப்பார் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் பிரமாண்ட இசைகச்சேரியை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியை காண பல ரசிகர்கள், ரசிகைகள் வருகை தந்திருந்தார்கள்

மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார்.

இசை நிகழ்ச்சி:-

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மோசமான ஏற்பாடு:-

இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என 2000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் பதிவு செய்யப்பட்டன.

25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

ரசிகர்கள் இசைக்கச்சேரியில் நடைபெறும் இடத்திற்கு சென்ற நிலையில் , அங்கு சரியான பார்க்கிங் வசதி செய்யப்படாமல் பல மணி நேரம் காத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது . 

5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலருக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை என்றும் கூட்டத்துக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறியதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். 

இது மோசமான கான்செர்ட் எனவும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார்.

ஏ,ஆர், ரஹ்மான்:-

இந்நிலையில், ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, "அன்புள்ள சென்னை மக்களே, இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். உங்கள் குறைகளை எங்கள் குழு விரைவில் நிவர்த்தி செய்யும் " என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு முன்பு இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பியதற்கு நாங்களே பொறுப்பேற்று கொள்கிறோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்:-

45,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

6,000 பேர் நின்றுகொண்டு நிகழ்ச்சி பார்க்கும் வகையில் டிக்கெட் கொடுத்திருந்தோம். 

நிகழ்ச்சிக்கு 49,000 பேர் வந்திருந்தனர், இடையில் இருந்த சிலர் எழுந்து நின்றதால் குழப்பம், சிலர் தங்கள் பகுதியிலிருந்து வேறு பகுதியில் ஏறி குதித்தனர்

பொது மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம் என்று கூறியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback