இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் முழு விவரங்கள்
நாடு முழுவதும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்
பல்வேறு திட்டங்களுக்கான கால அவகாசம் நிறைவடையவிருக்கிறது. மேலும், பல புதிய விதிமுறைகளும் அக்டோபர் 1ம் தேதியிலிருந்து அமலாகவிருக்கின்றன.அப்படி, கால அவகாசம் முடியும் திட்டங்கள் மற்றும் அமலாகவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்த பட்டியல் உங்கள் பார்வைக்கு
நாமினி கட்டாயம்:-
இந்த செப்டம்பர் 30ம் தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்டு கணக்குகளுக்கு பரிந்துரையாளர் ஒருவரின் பெயரை குறிப்பிடுவது அவசியம் ஆகும்
மியூச்சுவல் ஃபண்டு கணக்குகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் நாமினியை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்.
செப்டம்பர் 30ம் தேதிக்குள் மியூச்சுவல் பண்டுதாரர்கள் தங்கள் கணக்குகளின் நாமினியை சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் உங்கள் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது., மேலும் கூட்டுக் கணக்குகளுக்கும் இது பொருந்து என்பது குறிப்பிடத்தக்கது
டிசிஎஸ் விதிகள்:-
2023 – 24 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு TCS கட்டணங்களை ஐந்து சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெட்டி கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்யும் பணத்திற்கு 20% வரி செலுத்த நேரிடும்.
அதாவது கிரெடிட் கார்டுகளின் மூலமாக உங்கள் வெளிநாட்டு செலவுகள்ரூ.7 லட்சத்துக்கும் குறைவான செலவினங்களுக்கு 5% டிசிஎஸ் செலுத்த வேண்டும்.
7 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் அக்டோபர் 1 முதல் 20% டி சி எஸ் செலுத்தப்பட வேண்டும்.
வெளிநாட்டுக் கல்விக்காகக் கடன் பெறுபவர்களுக்கு, ரூ. 7-லட்சம் வரம்புக்கு மேல் 0.5 சதவீத குறைந்த டிசிஎஸ் விகிதம் விதிக்கப்படும்.
மேலும் மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகள் ஏற்படும் பட்சத்தில் டிசிஎஸ் ஐந்து சதவீதமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிமேட் மற்றும் டிரேடிங் கணக்கு:-
மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் வாடிக்கையாளர்கள் நாமினியை செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கட்டாயம்:-
பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் கணக்குகளில் ஆதார் எண்ணை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
2000 ரூபாய் :-
மத்திய அரசின் அறிவிப்பின்படி நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது இதனால் பொதுமக்கள் தங்கள் கைகளில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனரேட்டர் காசு மாசு:-
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், டீசல் ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை, சிறப்பாகத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆய்வை காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையம் மேற்கொண்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள், அலுவலகப் பகுதிகள் உட்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த இந்த ஆணையம், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட இந்த அட்டவணை 01.10.2023 முதல் கடுமையாக பின்பற்றப்படும். இதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை சம்பந்தப்பட்ட அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டுமென்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சொத்து பத்திர பதிவில் புகைப்படம் கட்டாயம்:-
வரும் அக்.1ம் தேதி முதல் பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துகள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு, ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
செல்போனுக்கு தடை:-
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை அக்டோபர் 1 ம் தேதி அன்று முதல் தடை
பக்தர்கள் 1 10 2023-ம் தேதி முதல் கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ, சாதனங்களை திருக்கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தவறி கொண்டு வரும் பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ சாதனங்களை திருக்கோவில் நுழைவாயிலில் உள்ள படிப்பாதை , மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் ஏற்படுத்தபட்டுள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்லுமாறும் , தரிசனம் முடிந்து பின்னர் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ்:-
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த சட்டம் 2023 மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரஉள்ளது. இந்த சட்டத்திருத்ததின் மூலம் அரசின் சேவைகளுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அக்.,1ம் தேதி முதல் மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு, அரசுப்பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஒரே அரசு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது.
அரசு வேலைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம்
இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேர்வதற்கு பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் புதிய சட்டத்திருத்தம் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகிறது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்