Breaking News

மகளின் திருமணத்திற்க்காக வங்கி லாக்கரில் வைத்து இருந்த ரூ18 லட்சம் பணத்தை அரித்த கரையான்கள் பெரும் சோகம்

அட்மின் மீடியா
0

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் வசித்து வருபவர் அல்கா பதக். இவர் தனது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக ரூ.18 லட்சம் பணத்தை சேமித்து வைத்திருந்தார். 



இதனை வீட்டில் வைப்பதை காட்டிலும் வங்கி லாக்கரில் பத்திரப்படுத்தலாம் என உறவினர்கள் அறிவுரை கூற அதனை நம்பி பாங்க் ஆப் பரோடாவின் ராமகங்கா விஹார் கிளை லாக்கரில், பணத்துடன் நகைகளும் வைத்துள்ளார் வங்கி மேலாளர் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பித்தல் மற்றும் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறைகளுக்காக அல்கா பதக்கை அழைத்திருந்தார்கள் 

அதன்படி பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சென்று வங்கி நடைமுறைகளை முடித்த பின்னர் தனது லாக்கர் இருப்புகளை சரிபார்க்க விரும்பினார்.வங்கி லாக்கர் அப்போது வங்கி லாக்கரை திறந்து பார்த்த போது அல்கா பதக், அதிர்ச்சியில் மயங்கி சரிந்து விழுந்தார். 

மகளின் திருமணத்துக்காக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.18 லட்சத்தையும் கரையான்கள் அரித்துவிட்டன. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார் 

இதனையடுத்து அல்கா பதக் வங்கி லாக்கரில் பத்திரப்படுத்திய இருந்த மொத்த தொகை குறித்து வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback