Breaking News

வடமாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்தின் பின்பக்கம் வழியாக ஏறி, உடமைகளை கொள்ளை அடிக்கும் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

தற்போது சமூகவலைதளங்களில் ஒரு பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பேருந்தின் பின்பக்கம் வழியாக ஏறி உடமைகளை கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சி தான் அது



அதில் ஹைவே சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தை இரு சக்கர வாகனத்தில் பின்தொடரும் இரு கொள்ளையர்கள், வாகனம் ஓடிகொண்டிக்கும்போதே பேருந்து மீது ஏறி பயணிகளின் உடைமைகளை திருடிவிட்டு லாவகமாக பேருந்தில் இருந்து இறங்கி அதே பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சி அது

கோயம்புத்தூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர், கடந்த மே 28ஆம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள காசி, சாய்பாபா கோயில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்றுள்ளனர்.

ஜூன் 7 இரவு ஒடிசாவில் இருந்து குஜராத்தில்  இருந்து ஒடிசா வரும் போது அந்த சம்பவம் நடந்துள்ளது அதிகாலை நேரம் என்பதால்  அனைவரும் பேருந்தில் அனைவரும் தூங்கி கொண்டுந்தபோது நடந்துள்ளது என்றும் சம்பவம் நடந்தது யாருக்கும் தெரியாது என்றும் 4 மணியளவில் குஜராத்திற்கு வந்து போது பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்து காணப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் பேருந்தின் மீது ஏறி உடமைகளை சரி பார்த்துள்ளனர். அப்போது சிலரின் உடமைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பேருந்தின் பின்பக்கம் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில், அதிகாலை 2 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது, பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவர், ஓடும் பேருந்தில் தாவி ஏறுவதும், பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை கீழே வீசுவதும் பதிவாகி இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/velmurugantheni/status/1667142315226574850

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback