Breaking News

குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 10,748 ஆக அதிகரிப்பு!

அட்மின் மீடியா
0

குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என TNPSC அறிவித்துள்ளது.


தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 18.5 லட்சம் பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த எழுத்துத் தேர்வு முடிவுள்  கடந்த மார்ச் 25ம் தேதி வெளியானது 

இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்த்துவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஜூன் 18ம் தேதி நிலவரப்படி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback