Breaking News

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இன்றும், நாளையும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 



திருச்சியில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டமும், நாளை  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால்  திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. பிரதீப் குமார் அவர்கள் திருச்சி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக முறையை ஏப்ரல் 29 மற்றும் மே 13ம் தேதி ஆகிய தேதிகள் பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback