Breaking News

கோடை காலம் என்பதால் ஜூன் 30 ம் தேதி வரை வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய தேவையில்லை!! அதிரடி உத்தரவு!!

அட்மின் மீடியா
0

கோடை காலத்தில் கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்களித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி. தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஆண்டு தோறும் ஏப்ரல் 1 - ம் தேதி முதல் ஜூன் 30 - ம் தேதி வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொதுவாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அனைவருமே கருப்பு வெள்ளை உடைக்கு மேல் கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, கருப்பு கவுன் ஆகியவற்ற அணிந்து ஆஜராக வேண்டும். 

இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மார்ச் முதல் ஜூலை வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திடம் மெட்ராஸ் பார் அசோசியேஷன் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை  ஏற்று வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய தேவையில்லை.ஆனால், கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளைப் பட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இந்த உத்தரவு சென்னை ஐகோர்ட், மதுரை கிளை, தமிழ்நாடு & புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback