Breaking News

உலக தண்ணீர் தினத்தையொட்டி மார்ச் 22 ம்தேதி கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு

அட்மின் மீடியா
0

உலக தண்ணீர் தினத்தையொட்டி மார்ச் 22 ம்தேதி  கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு



மார்ச் 22ம் தேதி, உலக தண்ணீர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

உலக தண்ணீர் தினமான 22:03.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். 

பார்வை 2-ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். 

கிராம சபைக் கூட்டங்ளை மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் நடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்

கிராம சபை நடத்துவது குறித்து பதிவு செய்திடும் பொருட்டு கைபேசி செயலி (Android applcation) ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback