Breaking News

ராஜஸ்தானில் பட்டபகலில் நடு ரோட்டில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கறிஞர்..! வீடியோ rajasthan advocate murder viral video

அட்மின் மீடியா
0

 ராஜஸ்தானில் பட்டபகலில் நடு ரோட்டில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கறிஞர்..! வீடியோ


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வழக்கறிஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜுக்ராஜ் சவுகான் என்ற வழக்கறிஞர் மாலை 6 மணியளவில் தனது பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நடு ரோட்டில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரை வழி மறைத்து தங்களிடம் இருந்த கத்தி மற்றும் அரிவாளை வைத்து அந்த வழக்கறிஞரை சரமாறியாக தாக்கியுள்ளர் இதில் காயமடைந்த சவுகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசாரை மேலும் கூறினர்

சிசிடிவி காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/AHindinews/status/1627143562902257665

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback