குவைத்தில் ஓர் துயரம் | தமிழ் பெண் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை Indian lady committed suicide in kuwait
குவைத்தில் உள்ள பஹாஹீல் வசித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அகிலா கார்த்தி என்பவர் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு குடியிருப்பு கட்டிடத்தின் 6 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டைச் சேர்ந்த அகிலா கார்த்தி எனும் பெண்மணி தனது கணவர் மற்றும் 2 வயது மகளும் 10 வயது மகன் என இரு குழந்தைகளுடன் குவைத்தில் உள்ள ஃபஹாஹீல் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவரது கணவர் வேலைக்கு சென்றிருந்த போது தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கட்டிடத்தின் 6 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்
Indian woman kills her two kids before committing suicide
Indian woman jumps from building after killing two children
Tags: வெளிநாட்டு செய்திகள்