Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவேரா திருமகன் மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. 

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார் என சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

மனுத்தாக்கல் தொடக்கம் : ஜனவரி 31ம் தேதி

மனுத்தாக்கல் கடைசி நாள் : பிப்ரவரி 7 ம் தேதி

மனுக்கள் பரிசீலனை : பிப்ரவரி 8ம் தேதி

வாபஸ் பெற கடைசி தேதி : பிப்ரவரி 10ம் தேதி

வாக்குப்பதிவு நாள்: பிப்ரவரி 27 ம் தேதி

வாக்கு எண்ணிக்கை நாள்: மார்ச் 2 ம் தேதி

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback