தென்காசி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணி காலியிடங்கள்:- tenkasi village assistant recruitment 2022
தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 47 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,
தென்காசி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் கீழ்கண்ட விபரப்படி தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், தகுதியான நபர்களின் உரிய கல்வித்தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவுத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகிய மூலமாக நிரப்பப்பட உள்ளன. எனவே கீழ் குறிப்பிட்டுள்ள தகுதிகளை உடைய நபர்கள் 10.10.2022 முதல் 07.11.2022 மாலை 5.45 மணி வரை இணையதளம் மூலமாக கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு உரிய விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பத்தினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தென்காசி வட்டத்தில்
குணராமநல்லூர்,
ஆவுடையானுர்,
ஆழ்வார்குறிச்சி பகுதி - 2,
கீழ ஆம்பூர்,
பாட்டபத்து,
பாட்டாக்குறிச்சி,
சில்லரைப்புரவு,
குத்துக்கல்வலசை,
சிவசைலம்
ஆகிய 9 கிராமங்கள் காலி பணியிடங்கள் உள்ளன.
செங்கோட்டை வட்டத்தில்
கணக்கப்பிள்ளை வலசை,
நெடுவயல்,
வல்லம்,
இலத்தூர்,
வடகரைகீழ்பிடாகை,
நாகல்காடு
ஆகிய 6 கிராமங்கள் காலிபணியிடங்கள் உள்ளன.
வீரகேரளம்புதூர் வடடத்தில்
இராஜகோபாலாபேரி,
வாடியூர்,
வீராணம்,
மாறாந்தை,
கீழப்பாவூர் பகுதி -2,
மாயமான்குறிச்சி,
சுப்பையாபுரம்,
நெட்டூர்
ஆகிய 8 கிராமங்களில் காலி பனியிடங்கள் உள்ளன
கடையநல்லூர் வட்டத்தில்
நயினாரகரம்,
சேர்ந்தமங்கலம்,
கடையநல்லூர்,
கிளாங்காடு,
பொய்கை,
புளியங்குடி,
சிந்தாமணி,
தலைவன்கோட்டை,
தி.நா.புதுக்குடி,
நகரம்
உள்ளிட்ட 10 கிராமங்களில் காலி பணியிடங்கள் உள்ளன.
சங்கரன்கோவில் வட்டத்தில்
கரிவலம்வந்தநல்லூர்,
வடக்குப்புதூர்,
சங்கரன்கோவில்,
பந்தபுளி,
பனையூர்
ஆகிய 5 கிராமங்களில் காலி பணியிடங்கள் உள்ளன.
சிவகிரி வட்டத்தில்
இனாம்கோவில்பட்டி,
இராமநாதபுரம்,
அரியூர்
ஆகிய 3 கிராமங்களில் காலி பணியிடங்கள் உள்ளன.
திருவேங்கடம் வட்டத்தில்
வாகைக்குளம்,
கலிங்கப்பட்டி பகுதி -1,
திருவேங்கடம்,
சுப்பையாபுரம்,
மருதங்கிணறு,
மதுராபுரி
ஆகிய 6 கிராமங்களில் காலி பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
இருப்பிடச் சான்று
சாதிச்சான்று
வேலைவாய்ப்பு பதிவு அட்டை
ஆதார் அடையாள அட்டை,
குடும்ப அட்டை
பள்ளி மாற்றுச்சான்றிதழ்,
பிறப்பு சான்று,
ஆதரவற்ற விதவையாக இருப்பின் சான்று,
மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அதற்குரிய அடையாள அட்டை
முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் அடையாள அட்டை
இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம்
விண்ணப்பதாரர் தகுதிகள்:-
1. ஒரு வருவய் கிராமத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும்.
2.சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
3.சம்பந்தப்பட்ட வட்டத்தை தவிர இதர வட்டங்களை சேர்ந்தவர்கள், இதர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
4.குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.(01.07.2022 அன்று).
5. 1.07.2022 அன்று 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
6. பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32, இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 37. (மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தொடர்புடைய அரசு ஆணைகளின்படி வயது தளர்வுகள் பின்பற்றப்படும்)
7. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத / படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
8.சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
9.எந்தவித குற்ற வழக்கிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.
10. விண்ணப்பதாரரின் கணவரோ / மனைவியோ உயிருடன் இருக்கும்போது வேறு திருமணம் செய்தவராக இருக்கக்கூடாது.
11. விண்ணப்பத்துடன் அனைத்து சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
12. விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்திற்காக எவ்வித சிபாரிசும் நடாக்கூடாது. எவ்வகையிலாவது சிபாரிசு செய்வது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக அரசின் இணையதளம் https://www.tn.gov.in-ல், வருவாய் நிர்வாக துறையின் இணையதளம் https://cra.tn.gov.in-ல் மற்றும் தென்காசி மாவட்ட இணையதளம் http://tenkasi.nic.in-ல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ள
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/10/2022101261.pdf
Tags: வேலைவாய்ப்பு