Breaking News

சென்னையில் குல்லா ஒரு கேடா? என்று இஸ்லாமிய சிறுவனை தாக்கிய நபர் கைது!

அட்மின் மீடியா
0

குல்லா அணிந்த காரணத்துக்காக 8 ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் சிறுவனை தாக்கிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவன் முஹம்மது இக்லாஸ் 8 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், ரங்கராஜபுரத்தில் உள்ள ரஹீமா மசூதியில் குர்ஆன் மனனம் செய்து வந்து உள்ளார். நேற்று முந்தினம் இரவு 8 மணியளவில் தொழுகை, அரபி வகுப்பு எல்லாம் முடித்துவிட்டு அந்த சிறுவன் தனியாக சைக்கிளில் வந்துள்ளார். 

அப்போது கோடம்பாக்கம் ஆரிய கவுடா சாலை கண்ணதாசன் தெரு ஜங்ஷனில் வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென சிறுவனை வழிமறித்து தாக்கி  சிறுவனிடம் உனக்கு தொப்பி ஒரு கேடா என கூறி தாக்கிய போது அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் அந்த நபர் உடனடியாக இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தப்பியுள்ளார். 

காயமடைந்த சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

இந்த புகார் தொடர்பாக அசோக் நகர் போலீசார் சம்பவ இடம் சென்று சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை நடத்தினார்கள் இந்த நிலையில் சிறுவனை தாக்கிய நபரை இன்று அசோக் நகர் போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவர் மீது இரு தரப்பிடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback