ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் இனி ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்!!
முதல் வகுப்பு ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தாலும் இனி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல் வகுப்பு அல்லது ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், அதற்கான கட்டணத்துடன் கூடுதலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு என்பது ஒப்பந்தம் என்பதால் அதன்படி ஐஆர்சிடிசி அல்லது இந்திய ரயில்வே வாடிக்கையாளருக்கு சேவை வழங்குகிறது. எனவே முன்பதிவை ரத்து செய்யும் போது ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரத்து கட்டணம் என்பது செலுத்தப்படும் தொகை ஆதலால் அதற்கு ஜிஎஸ்டி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ரயில் டிக்கெட்டை ரத்துசெய்ய ரூ.240 கட்டணம் வசூலித்தால், அதற்கு ரூ. 12 ஜிஎஸ்டியாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்