Breaking News

அமிரகத்தில் இருந்து வந்த கேரள நபருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளர்.

 


இதுகுறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது. வெளிநாட்டில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் அவர் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது.எனவே, வெளிநாட்டில் இருந்து வந்தவரின் ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது அதன் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றார்.மேலும், நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் சிறப்பு கண்காணிப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback