அதிமுக இணை துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்.. ஈபிஸ் ஆதரவாளர்கள் 10 பேர் நீக்கம் – ஓபன்னீர் செல்வம் அறிக்கை
அதிமுகவின் இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
மேலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி,
கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் துணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுபோன்று அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உளப்பட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 10 பேர் நீக்கப்படுவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
சிறுணியம் பலராமன், எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், ரவிசந்திரன், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, கிருஷ்ணமுரளி மற்றும் விஎஸ் சேதுராமன் ஆகிய 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்