கோவில் திருவிழாக்களில் ஆபாச வார்த்தைகளோ, நடனங்களோ கூடாது- மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
அட்மின் மீடியா
0
கோயில் நிகழ்வில் ஆபாச நடனம் இருந்தால் காவல்துறையினர் உடனடியாக நிகழ்வை நிறுத்தலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது இந்த வழக்கில்
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருக்கக் கூடாது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் காவல்துறையினர் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தலாம் எனவும் ஐகோர்ட் கிளை நீதிபதி தமிழ்ச்செல்வி பல நிபந்தனைகளை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தார்.
Tags: தமிழக செய்திகள்