Breaking News

630 அடி ஆழ குழியில் அபூர்வ மூலிகைகள் நிறைந்த பசுமையான காடு சீனாவில் கண்டுபிடிப்பு- வீடியோ

அட்மின் மீடியா
0

தெற்கு சீனாவில் இருக்கும் குவாங்சி ஜுவான் பகுதியில்  குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 630 அடி 192 மீட்டர் ஆழமான சிங்க்ஹோலின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பசுமையான காடு தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது



ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் நடத்திய சுற்று பயணம் ஒன்றில் இந்த குழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் இந்த குழிக்கு செல்ல மூன்று வழிகள் உள்ளன.இந்த குழிக்கு உள்ளே டிரெக்கிங் சென்று பார்த்ததில்.. அதில் முழுக்க முழுக்க மரங்கள்.. வினோதமான செடிகள், காய்கள், கனிகள், அழிந்து போனதாக கருதப்படும் சில அரிய வகை மூலிகைகள் பல காணப்பட்டு இருக்கின்றன. இதில் சில மரங்கள் 131 அடி உயரம் கூட இருந்துள்ளன. 

இந்த வகை நிலப்பரப்பு பாறை அரிப்பு காரணமாக உருவாகிறது. லேசான அமிலத்தன்மை கொண்ட மழைநீர், மண்ணின் வழியாக செல்லும் போது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, அதிக அமிலத்தன்மையை உருவாக்குகிறது. நீர் பின்னர் துளிர்விட்டு, பாய்ந்து, பாறை பிளவுகள் வழியாக பாய்கிறது, படிப்படியாக அவற்றை சுரங்கங்கள் மற்றும் வெற்றிடங்களாக பெரிதாக்குகிறது. 

இத்தகைய மகத்தான சிங்க்ஹோல்களை "டியாங்கெங்" என்று அழைக்கிறார்கள். உள்ளேயிருக்கும் சிங்க்ஹோல் 1,004 அடி நீளமும் 492 அடி அகலமும் கொண்டது என்று கார்ஸ்ட் ஜியாலஜி நிறுவனத்தின் மூத்த பொறியாளரான ஜாங் யுவான்ஹை கூறுகின்றார்


வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=nKsH9BRJ1oU


https://www.youtube.com/watch?v=C3QTq6tQfhY

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback