திடீரென வெடித்து சிதறிய புல்லட் - வைரல் வீடியோ
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், குண்டகல்லுவில் பிரசித்தி பெற்ற கசாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இங்கு மைசூரை சேர்ந்த ரவிச்சந்திரா என்பவர் யுகாதி பண்டிகையை முன்னிட்டு தனது புதிய புல்லட் வண்டிக்கு பூஜை போட வந்துள்ளார்.
நீண்ட தூரத்தில் இருந்து வந்ததால் வண்டி சூடாக இருந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் வண்டியை பூஜை போட நிறுத்திய போது தீ பிடிக்க தொடங்கியது
இதனையடுத்து புல்லட்டின் உரிமையாளர் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்ற போதிலும் தீ கட்டுக்கடங்காமல் வாகனம் முழுவதும் பரவியது. திடீரென அந்த வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த வாகனத்தில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. இதில் அந்த வாகனம் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. புல்லட் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ