Breaking News

BIG BREAKING....தற்காலிகமாக போர் நிறுத்தம் ரஷ்யா அறிவிப்பு....

அட்மின் மீடியா
0

போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான அடிப்படையில், உக்ரைன் உடனான போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு



உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10வது நாளாக போர் தாக்குதல் நடத்திவருகின்றது இதனால் அங்குள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. அங்குள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில் மீட்பு பணிகளுக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை GMT நேரப்படி 6மணி முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் பாதகாப்பாக வெளியேறுவதற்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback