Breaking News

ஹிஜாப் விவகாரம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த கர்நாடக உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த கர்நாடக உயர்நீதிமன்றம்

மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்தது தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு

கர்நாடக மாநிலம்,  உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.     இதற்கு எதிர்ப்பை பதிவைச் செய்யும் விதமாக இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் காவி துண்டு போட்டுக்கொண்டு கல்லூரிக்கு வந்தனர் இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் இந்து, இஸ்லாமிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றினார். 

அதன்படி தலைமை நீதிபதி ரிதுராஜ், நீதிபதிகள் கிருஷ்ணா தீக்சித், காஸி ஆகியோர் விசாரணையை தொடங்கினர்.   

அப்போது ஊடகங்களுக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில் நீதிமன்ற விவகாரங்களை ஊடங்கள் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். 

மேலும் ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளில் வருமா, இஸ்லாமிய நடைமுறைப்படி ஹிஜாப் அணிவது கட்டாயமா என ஆய்வுசெய்வதாகவும் கூறினர்.   

இறுதி உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவி துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்ற இந்த இடைக்கால உத்தரவும் இடப்பட்டது

மேலும் ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கர்நாடக ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback