Breaking News

டெல்லியிலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்

அட்மின் மீடியா
0

 இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்கள் இரவு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது. 


இதையடுத்து உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.பல மாநிலங்கள் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, டெல்லியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தலைநகர் டெல்லியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback