Breaking News

2022 மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு..

அட்மின் மீடியா
0

டி.என்.பி.எஸ்.சி. 2022-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. 

 


கொரானா காரணமாக 2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2,குரூப் 2 A தேர்வுகள் நடத்தப்படாத நிலையில்,குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும்,குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.



குரூப் 2 பிரிவில் 5831 காலிப்பணியிடங்களும், குரூப் 4 பிரிவில் 5255 காலிப்பணியிடங்களும் நிரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 



குறிப்பாக,அடுத்த ஆண்டு 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.டிஎன்பிஎஸ்சிகுரூப் 2க்கான சரிசெய்யப்பட்ட பாடத்திட்டம் ஒன்றிரண்டு வாரங்களில் இணையதளத்தில் வெளியாகும் என்றும், குரூப் 1 முதன்மைத் தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என்றும் , தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback