Breaking News

ஜெயலலிதா இல்லம் அரசுடைமை ஆக்கியது செல்லாது. தீபா,தீபக்கிடம் ஒப்படைக்கவேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாதுவேதா இல்லம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனிலுள்ள வேதா இல்லம் அதிமுக ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்டது. வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு வேதா இல்லமும் அங்குள்ள அசையும் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டன.

மேலும் வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்  மற்றும் மகள் தீபா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி வழக்குகள் மீதான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார். 

அதில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுமையாக்கியது செல்லாது எனவும் அரசு ஒரு வாரத்திற்குள் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது  எனவும் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் வேதா இல்லத்தை ஒப்படைக்கவும்  சென்னை ஆட்சியருக்கு உத்தரவு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback