மின்வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டியானையை எழுப்ப முயன்ற தாய் யானை.... வைரல் வீடியோ
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அனை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை கடக்க முயன்ற மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த தாய் யானை உயிரிழந்த குட்டி யானை அருகில் சென்று தன் தும்பிக்கையால் தட்டி தடவி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டதை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்தனர்.
வீடியோவை பார்க்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க:-"தாய்மை"
— Srini Subramaniyam (@Srinietv2) November 16, 2021
கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த தனது குட்டியை கண்ணீருடன் எழுப்ப முயற்சிக்கும் தாய் யானை.@gurusamymathi @kovaikarthee @Prasanth_IFS @SudhaRamenIFS @gowthamsudha @wilson__thomas @vijay_vast @sujinsamkovai #elephants #Kerala pic.twitter.com/4l3xEjgNfV
Tags: வைரல் வீடியோ