மனிதாபிபானம் இல்லாத கொடூரம்! லாரியின் பின்னால் கட்டி இழுத்துச் சென்று பழங்குடியின நபர் கொலை!! வைரல் வீடியோ
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில் கன்ஹையாலால் பீல் என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது .அதில் , வாகனத்தில் இருந்த பால் கேன் சாலையில் விழுந்து பால் முழுவதும் கீழே கொட்டியது .
இதனால் ஆவேசமடைந்த அந்த நபர் கன்ஹையாலாலை அடித்துள்ளார் . மேலும் தனது நண்பர்களை அங்கு வரவழைத்து , அவரின் கை , காலை ஒன்றாகக் கட்டியுள்ளார் .பின்னர் அந்த கயிறை லாரியில் கட்டி வாகனத்தை ஓட்டிச் சென்றனர் .
இதில் அவர் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார் . இதனால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது . பின்னர் சில கிலோமீட்டர் இழுத்து சென்ற பிறகு அவரை சாலையின் ஓரேம் வீசிவிட்டுச் அந்த கும்பல் சென்றுவிட்டது .
இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர் . இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்ஹையாலா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் . இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
https://twitter.com/Pradeep_tk/status/1431724296087293954
Here is how Adivasi is treated in new India 😡😡😡😡😡😡😡😡😡 pic.twitter.com/A5aQeFC9oB https://t.co/b2tMUY5pPJ
— Pradeep 🕶️ 🚜 (@Pradeep_tk) August 28, 2021
Tags: இந்திய செய்திகள்