மேலும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு அதிரடி உத்தரவு!
7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
ராணிபேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் ஐ.பி.எஸ் அவர்கள் மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக இருந்த தீபா சத்யன் ஐ.பி.எஸ், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்
சென்னை, பொருளாதார குற்றப் பிரிவு காவல் பொது ஆய்வாளராக இருந்த கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் சென்னை ரயில்வே காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அபின் தினேஷ் மோதக் ஐபிஎஸ் அவர்கள் சென்னை, பொருளாதார குற்றப் பிரிவு காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் கடலோர காவல் துறை, கண்காணிப்பாளராக இருந்த ஜெயந்தி ஐ.பி.எஸ் அவர்கள் சேலம் மண்டல அமலாக்கத் துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணியில் இருந்த இளங்கோ ஐ.பி.எஸ் அவர்கள் சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் மண்டல அமலாக்கத் துறை கண்காணிப்பாளராக இருந்த மகேஷ் குமார் ஐ.பி.எஸ் அவர்கள் நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்