Breaking News

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

அட்மின் மீடியா
0
மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும்‌ வெப்பச் சலனம்‌ காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இன்று கனமழை பெய்யக்கூடும். 

ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர்‌, தென்காசி மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும் பெய்யக்கூடும்‌ என தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback