ஆகஸ்டு 1 முதல் ஏ.டி.எம் கட்டணம் உயர்வு- ரிசர்வ் வங்கி அதிரடி..!
அட்மின் மீடியா
0
ஏ.டி.எம் பணப்பரிவர்த்தனை கட்டணம் உயர்வு- ரிசர்வ் வங்கி அதிரடி..!
தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அதே வங்கியின் ஏடிஎம் மூலம் ஒரு மாதத்திற்க்கு 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணப்பரிவர்த்தனை கட்டணமில்லாமல் செய்யலாம்.
இதற்கு மேல் ஏடிஎம் கொண்டு பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது
இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது அதன்படி
வங்கிக் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம்.
ஐந்து முறைக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும், கட்டணம் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பணப் பரிவர்த்தனை அல்லாத பிற சேவைக்கு ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்த கட்டணம், 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு ஆக., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதர வங்கிகளின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மாதத்துக்கு மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.அதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்தாண்டு ஜன., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை படிக்க
Tags: தமிழக செய்திகள்