Breaking News

FACT CHECK தற்காலிக சபாநாயகராக பேராசிரியர் ஜவாஹிருல்லா நியமனம் என்ற செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் தற்காலிக சபாநாயகர் பொறுப்பு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு வழங்கப்படுவதாக ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதை அடுத்து மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள் அதில்
 

தற்காலிக சபாநாயகராக பேராசிரியர் ஜவாஹிருல்லா நியமனம் என்ற வதந்தியை நம்பவோ பரப்பவோ வேண்டாம் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் தற்காலிக சபாநாயகர் பொறுப்பு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களிலும் ஒரு சில பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் ஆகும் தற்காலிக சபாநாயகர் பொறுப்பு பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற வதந்திகளை பரப்பவோ நம்பவோ வேண்டாம் என்ற மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ப அப்துல் சமது 
பொதுச்செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback