தேர்தலுக்கு பிறகு லாக்டவுனா? - யாரும் நம்பாதீங்க !!சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
தேர்தலுக்கு பிறகு லாக்டவுனா? - யாரும் நம்பாதீங்க !!சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
இன்று சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்களிக்கும் போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கட்டாயம் மாஸ்க் அணிந்து கொண்டு தான் மக்கள் வாக்களிக்க செல்ல வேண்டும்.
மாஸ்க் இல்லாமல் தயவு செய்து செல்ல வேண்டாம். அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க வேண்டும்.
கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம். 6ம் தேதிக்கு பிறகு லாக் டவுன் போடப்படும் என வதந்திகள் பரவுகின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம். மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Tags: தமிழக செய்திகள்