ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ. 500 அபராதம்: ரயில்வே துறை
ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
மேலும் விதிமுறைகள் மீறுவோர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்திய ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Indian Railways is taking various measures to contain the spread of the resurgence of Covid-19 pandemic. One of the specific guideline is to wear face masks/covers.
— Ministry of Railways (@RailMinIndia) April 17, 2021
Fine upto Rs 500 shall be imposed on persons for not wearing a face mask/cover in Rly. premises(including trains) pic.twitter.com/VfnWzC2qFC
Tags: இந்திய செய்திகள்