கடைசி நாளில் 2 மணி நேரம் கூடுதலாக இரவு 7 மணிவரை பிரச்சாரம் செய்ய அனுமதி: தேர்தல் ஆணையம்
கடைசி நாளில் 2 மணி நேரம் கூடுதலாக இரவு 7 மணிவரை பிரச்சாரம் செய்ய அனுமதி: தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் வரும் ஏப்.,6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.
பொதுவாக தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பாக மாலை 5 மணி வரை மட்டுமே பிரசாரத்திற்கு அவகாசம் வழங்கப்படும். ஆனால் இந்தமுறை அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான கடைசி பிரசார நாளான ஏப்ரல் 4ம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
அதன் காரணமாக அரசியல் கட்சியினர் இதன்படி ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்