இன்று முதல் 9,மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும் ,கல்லூரிகள் திறப்பு
தமிழக பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், இன்று(பிப்.,8) முதல், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்க உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்துடன் வருமாறு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வரவேண்டும்
வகுப்பறையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்