இனி கொரானா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் போட்டுகொள்ள 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள 195 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, தமிழகத்தில், 150-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு, கரோனா தடுப்பூசி போட தமிழக சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த வழங்கிட மத்திய அரசு அனுமதியளித்தது.
முதற்கட்டமாக மருத்துவர்கள், சுகாராப் பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு கொரனோ தடுப்பூசி வழங்கும் அனுமதியை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்