Breaking News

வாட்சப்பின் சர்ச்சைக்குரிய கொள்கையை திரும்ப பெற வேண்டும: மத்திய அரசு

அட்மின் மீடியா
0

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த மாதம் தனது புதிய தனியுரிமை கொள்கையை வெளியிட்டது. அதில் வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு, ஃபேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவிக்கவேண்டும் எனவும் இதற்கு அக்ரி அளிக்காதவர்கள் பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு, வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

                                                  

இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய புதிய கொள்கையைத் திரும்பப் பெறுமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி உள்ளது மேலும் இந்திய பயனாளர்களின் தகவல்கள் மற்றும் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிர்வது, பாதுகாப்பானது அல்ல என்றும் அது மேலும் பல சிக்கலை உருவாக்கும் என்றும் அரசுகருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனத்தின் அணுகுமுறையானது அதாவது புதிய கொள்கைகளை ஏற்க வேண்டும் அல்லது நிறுவனத்தின் பயன்பாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்பது சரியான நிலைப்பாடு அல்ல என்றும் அரசின் கடிதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback