Breaking News

FACT CHECK இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் சீக்கியர் புகைபடம் இந்தியாவில் நடந்ததா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  நிச்சயமாக இது 100% விவசாயிகளுக்கான போராட்டம் இதை நம்பினால் நீயும் இந்தியனே. என்று  சீக்கியர் ஒருவர் இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் இந்தியாவில் நடந்தது இல்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் தற்போது நடந்ததும் இல்லை

கடந்த 2013-ம் ஆண்டு  இந்திய ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள், காஷ்மீரிகள் லண்டனில் இந்தியன் ஹை கமிஷனுக்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அந்த சம்பவம் நடந்துள்ளது 


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


http://dalkhalsa.blogspot.com/2013_08_11_archive.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback