#BREAKING போராட்டம் தொடரும் விவசாயிகள் அறிவிப்பு..!
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஹரியானா குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இவர்களின் போராட்டம் தொடர்ந்து 6-வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்ட கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் தலைவர்களுக்கும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 32 விவசாய சங்கத்தை சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. அதன் பிறகு கோரிக்கைகள் நிறைவடையும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்லார்கள்.!
Tags: தமிழக செய்திகள்