சட்டமன்றத்தில் வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
3புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சட்டமன்ற்த்தில் தீர்மானம் நிறைவேற்றினார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
மேலும் 3 புதிய வேளான் சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே கிழித்தெறிந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இன்று டெல்லி சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில்,விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் டெல்லி அரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏகள் மகேந்திர கோயல் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்ட நகல்களை டெல்லி சட்டமன்றத்திற்குள் கிழித்தெரிந்தார்.
இவரைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே கிழித்தெறிந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேலும் அவர் பேசுகையில், கொரோனா காலத்திலும் அவசர அவசரமாக வேளாண் சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை என்ன எனவும் கேள்வி எழுப்பினார்
CM @ArvindKejriwal tears the copy of Centre's farm bills in Delhi Assembly.
— AAP (@AamAadmiParty) December 17, 2020
We refuse to accept these farm bills which are against our farmers. #KejriwalAgainstFarmBills pic.twitter.com/rBrcc67sRz
Tags: இந்திய செய்திகள்