Breaking News

FACT CHECK: கக்கன் அவர்களின் பேத்தி ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஜி.பி-யாக நியமனமா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரி, தமிழக டிஜிபியாக பதவியேற்றுள்ளார் என்று  மதுரை ஒலி என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தியின் உண்மை என்னவென்றால்?


அந்த செய்தியில் உள்ள புகைப்படத்தில் உள்ள ராஜேஸ்வரி IPS அவர்கள் கக்கன் அவர்களின் பேத்தி தான்

மேலும் அவர்கள் தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரெண்டாக இருந்து வந்தார்


இந்நிலையில் கடந்த 30.06.2020 அன்று  தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து  தமிழக அரசு உத்தரவிட்டது


அந்த உத்தரவில் தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரெண்டாக இருந்து வந்த ராஜேஸ்வரி அவர்கள்  டி.ஐ.ஜி  ஆக  அதாவது டெபுட்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல்ஆக பதவி உயர்வு பெற்றார்


ஆனால் அவர் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்றதை டி.ஜி.பி (டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ்) ஆக பதவி உயர்வு பெற்றதாக அந்த செய்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் தற்போதைய டி.ஜி.பி-யாக திரிபாதி அவர்கள் உள்ளார்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

வரிசை எண் 34

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback