இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: என்னென்ன தளர்வுகள் முழு விவரம்
அட்மின் மீடியா
0
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்
ஆன்லைன் உணவு சேவைக்கு இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது
தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சல் வழங்க மட்டுமே அனுமதி
காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்
வணிக வளாகம் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி
மற்ற செயல்பாடுகளை பொறுத்த வரை, ஜூன் 19ம் தேதிக்கு முந்தைய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்